Adiye Kolluthe Song Lyrics from Vaaranam Aayiram

 



 Movie   : Vaaranam Aayira  
Music   : Harris Jayaraj
                               Singers : Benny Dayal, Krish, Shruti Haasan
        Lyrics  : Thamarai                           



அடியே கொல்லுதே அழகோ அள்ளுதே

உலகம் சுருங்குதே இருவரில் அடங்குதே

உன்னோடு நடக்கும் ஒவ்வொரு நொடிக்கும்

அர்த்தங்கள் சேர்ந்திடுதே

என் காலை நேரம் என் மாலை வானம்

நீயின்றி காய்ந்திடுதே

அடியே கொல்லுதே அழகோ அள்ளுதே

உலகம் சுருங்குதே இருவரில் அடங்குதே

உன்னோடு நடக்கும் ஒவ்வொரு நொடிக்கும்

அர்த்தங்கள் சேர்ந்திடுதே

என் காலை நேரம் என் மாலை வானம்

நீயின்றி காய்ந்திடுதே

இரவும் பகலும் உன்முகம்

இரையைப் போலே துரத்துவதும் ஏனோ

முதலும் முடிவும் நீயென

தெரிந்த பின்பு தயங்குவதும் ஏனோ

வாடைக் காற்றினில் ஒரு நாள்

ஒரு வாசம் வந்ததே

உன் நேசம் என்றதே

உந்தன் கண்களில் ஏதோ

மின்சாரம் உள்ளதே

என் மீது பாய்ந்ததே

மழைக்காலத்தில் சரியும்

மண் சரிவைப் போலவே மனமும்

உனைக் கண்டதும் சரியக் கண்டேனே

அடியே கொல்லுதே அழகோ அள்ளுதே

உலகம் சுருங்குதே இருவரில் அடங்குதே

உன்னோடு நடக்கும் ஒவ்வொரு நொடிக்கும்

அர்த்தங்கள் சேர்ந்திடுதே

என் காலை நேரம் என் மாலை வானம்

நீயின்றி காய்ந்திடுதே

அழகின் சிகரம் நீயடி

கொஞ்சம் அதை நான் தள்ளி நடப்பேனே

ஒரு சொல் ஒரு சொல் சொல்லடி

இந்தக் கணமே உன்னை மணப்பேனே

சொன்னால் வார்த்தை என் சுகமே

மயில் தோகை போலவே என் மீது ஊருதே

எல்லா வானமும் நீலம் சில நேரம் மாத்திரம்

செந்தூரம் ஆகுதே

எனக்காகவே வந்தாய்

என் நிழல் போலவே நின்றாய்

உனைத் தோற்று நீ என்னை வென்றாயே

அடியே கொல்லுதே அழகோ அள்ளுதே

உலகம் சுருங்குதே இருவரில் அடங்குதே

உன்னோடு நடக்கும் ஒவ்வொரு நொடிக்கும்

அர்த்தங்கள் சேர்ந்திடுதே

என் காலை நேரம் என் மாலை வானம்

நீயின்றி காய்ந்திடுதே

Post a Comment

Previous Post Next Post