Nenjamellam Song Tamil Lyrics - Ayutha Ezhuthu

 

Nenjamellam_Ayutha Ezhuthu



ஏய் ஏய் ஏய் ஓர் உண்மை சொன்னால்

ஏய் ஏய் ஏய் நேசிப்போம்


நெஞ்சம் எல்லாம் காதல்

தேகமெல்லாம் காமம்

உண்மை சொன்னால் என்னை

நேசிப்பாயா


காதல் கொஞ்சம் கம்மி

காமல் கொஞ்சம் தூக்கல்

மஞ்சத்தின் மேல் என்னை

மன்னிப்பாயா


உண்மை சொன்னால் நேசிப்பாயா

மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா

உண்மை சொன்னால் நேசிப்பாயா

மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா


நேசிப்பாயா நேசிப்பாயா

நேசிப்பாயா நேசிப்பாயா

பெண்கள் மேலே மையல் உண்டு

நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்

நீ முத்த பார்வை பார்க்கும் போது

என் முதுகு தண்டில் மின்னல் வெட்டும்

நீ தானே மழை மேகம் எனக்கு

என் ஹார்மோன் நதியில் வெள்ளப்பெருக்கு

வா சோகம் இனி நமக்கெதுக்கு

யார் கேக்க நமக்கு நாமே வாழ்வதற்கு


உண்மை சொன்னால் நேசிப்பாயா

மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா

(நெஞ்சமெல்லாம்..)


காதல் என்னை வருடும் போதும்

உன் காமம் என்னை திருடும் போதும்

என் மனசெல்லாம் மார்கழி தான்

என் கனவெல்லாம் கார்த்திகைதான்

என் வானம் என் வசத்தில் உண்டு

என் பூமி என் வசத்தில் இல்லை

உன் குறைகள் நான் அறியவில்லை

நான் அறிந்தால் சூரியனில் சுத்தமில்லை

(நெஞ்சமெல்லாம்..)


Post a Comment

Previous Post Next Post